• June 7, 2025

கூட்டுறவுத்துறை பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 கூட்டுறவுத்துறை பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர் பணியிடத்தில் இருந்து கூட்டுறவுசார்பதிவாளர் பதவி உயர்வு பணியிடத்தில் சொந்த மாவட்டங்களில் காணப்பட்ட காலிப்பணியிடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊழியர்களை கொண்டு நிரப்பி காணப்படும் இதர காலிப்பணியிடங்களை மூதுரிமை வரிசையில் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்திட கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அதனை விடுத்து மூதுரிமையினை பின்பற்றாமல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றிட வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அ.ப.இளன்மாறன் தலைமைதாங்கினர்.. மாவட்டச் செயலாளர் வே.அக்னிமுத்துராஜ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தே.முருகன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கணேசன், தவமணி பீட்டர், சஙகர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் அ.சாம் டேனியல் ராஜ், கோரிக்கைகளை விளக்கி கூறினார். இதில், மாவட்டம் முழுமையும் உள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட இணைசெயலாளர் மாரிராஜா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *