மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் பாலசுப்பிரமணி (வயது 34) இவர் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் தினசரி காலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம் .நேற்று காலை 7 மணி அளவில் செல்லூர் பகுதியில் நடை பயிற்சி சென்றார். அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் வீட்டின் அருகே வந்த போது, அந்த பகுதியில் தயார் நிலையில் இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பாலசுப்பிரமணியை வழிமறித்து சரமாரியாக அாிவாளால் வெட்டினர்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை தொடர்ந்து அரிவாளால் வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஆபத்தான நிலையில் இருந்த பாலசுப்பிரமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு உயிரிழந்தார். கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதும் மர்மமாக உள்ளது.
கொலை செய்யபட்டவர் மீது சில வழக்குகள் உள்ளதாக கூறபபடுகிறது. இதன் எதிரொலியாக கொலை நடந்ததா? என்பது குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
