அ.ம.மு.க. பேரூராட்சி தலைவர், 5 கவுன்சிலர்கள் காங்கிரசில் சேர்ந்தனர்

தேனி மாவட்டம், அ.ம.மு.க.வை சேர்ந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பாண்டிஸ்வரன், ஏ. சுந்தரவள்ளி, . பி. சுகன்யா, எஸ். சந்திரா, எஸ். மலர்க்கொடி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகினர்.
பின்னர் தேனி என்.ஆர்.டி. தியாகராஜன் ஏற்பாட்டின் பேரில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
