சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார்.
அப்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கள்ளச்சாராய சாவு சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
.இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவு, நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல . கேள்வி நேரம் முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி அளிக்கிறேன் என்று கூறினார்.
ஆனால் இப்போதே விவாதிக்க வேண்டும் என்று கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர்,
வெளிநடப்புக்கு பிறகு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-‘
சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க வேண்டும். கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் இன்னொரு எம்/எல்/ஏ. சம்பந்தபப்ட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன, எனவே இந்த வழக்கை சி.பி.ஐ..விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
