• June 7, 2025

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  

 நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த புலன் விசாரணை நடத்த வேண்டும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்,

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, எஸ்.குமார், பகுதிச் செயலாளர்கள் எஸ்.முகமது ரபி (வேளச்சேரி), பி.ஜெயவேல் (சோழிங்கநல்லூர்) மற்றும் எம்.ஆர்.சுரேஷ் (வாலிபர் அரங்கம்), அமர் (மாணவர் அரங்கம்), சித்திரை செல்வி உள்ளிட்டோர் பேசினர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *