தீச்சட்டி ஏந்தி கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் பிரமுகர்

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான வக்கீல் அய்யலுசாமி ,கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
ஒரு கையில் தீச்சட்டி ஏந்தியபடியும், இன்னொரு கையில் ராஜீவ்காந்தி உருவப்பட அட்டையை வைத்துக்கொண்டும் கோஷம் எழுப்பியபடி கோட்டாட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கள்ளக்குறிச்சி கள்ள சாராய பலி சமப்வத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யபப்ட்டு இருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன் . சாராயம்,போதைபொருள் விற்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் கைகளை கட்டிப்போட்டு விட்டு இப்போது அவர்கள் மீது குற்றம் சாட்டுவது நியாயம் அல்ல.
இந்த சம்பவத்துக்கு முதல் அமைச்சர் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். மேலும் ஆட்சியர் மற்றும் போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
