கோவில்பட்டி கோவிலில் வருடாபிஷேக விழா

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து கும்பகலசங்கள் எழுந்தருளி கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது .பிறகு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் கோவில் தலைவர் தங்கவேல் செயலாளர் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமணன் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய சுவாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
