சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி; குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கபபட்டவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று வலியினால் பாதிக்கபப்ட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தபோனார்கள். இந்த் சமபவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுவரை மொத்தம் 49 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபை கூடியது. அவை தொடங்கியதும் கள்ளச்சாராய சாவு சம்பவம் எதிரொலித்தது.
கள்ளசாராய உயிரிழபினால் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர்,
கள்ள சாராய உயிரிழப்பு குறித்து சட்டசபையில் விவாதிக்க அதிமுக, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் கள்ள சாராய விற்பனையை தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அவர்கள் வெளியேறாமல் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்,. இதனால் அவை காவலர்களை வரவழைத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்,.
இதைதொடர்ந்து சபை காவலர்கள், அவைக்குள் வந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினார்கள். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசை கண்டித்து கோஷங்கள் எழுதிய அட்டைகளை வைத்தபடி கண்டன குரல் எழுப்பியபடி வெளியேறினார்கள்.
பின்னர் பா.ஜனதா மற்றும் பா..ம.க. உறுப்பினகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்,
