கோவில்பட்டியில் யோகா தினம் கொண்டாட்டம்; 40 வகை ஆசனங்களை செய்து அசத்திய `யோகாலயா குணா’



கோவில்பட்டியில் சர்வதேச யோகா தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி யோகாலயா பயிற்சி நிலையம் சார்பில் ஆர்த்தி மகால் வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை பிரமாண்டமாக கொண்டாட யோகா குணா ஏற்பாடு செய்து இருந்தார்.
யோகாலயா யோகா பயிற்சி நிலையம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இந்த யோகா தினத்தை கொண்டாடின. காலை 5.30 மணி அளவில் யோகா தினம் கொண்டாட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்றவர்கள் வெள்ளை டி..சர்ட் அணிந்து வந்து இருந்தனர்.
ஆண்களுக்கு சமமாக பெண்களும் பங்கேற்றனர். சிறுவர், சிறுமிகளும் வந்து இருந்தனர். முதலில் யோகா தினம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர்கள் என்.டி.சீனிவாசன், ஆர்த்தி, வித்யா, ரமேஷ், மற்றும் ஆசியாபார்ம்ஸ் பாபு, ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ், தொழில் அதிபர் ராஜ்குமார், காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யோகாலயா யோகா பயிற்சி நிலைய நிறுவனர் குணா வரவேற்று பேசினார். குத்துவிளக்கு ஏற்றி யோகா தினம் தொடங்கி வைக்கப்பட்டது,
சென்னையில் இருந்து வந்திருந்த யோகா பயிற்சியாளர் கவிதா கிருஷ்ணன் மற்றும் யோகா குணா ஆகியோர் மேடையில் இருந்தபடி யோகா செய்து காட்டினார். அதை பார்த்து அனைவரும் யோகா செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சின் உச்ச கட்டமாக யோகா குணா 40 வகையான ஆசனங்களை செய்து அசத்தினார். இது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டலை பெற்றது.
யோகா மஹா உற்சவம் முன்பதிவு
இன்று நடைபெற்ற யோகா தினத்தின் போது, யோகா குணா பேசுகையில் நவம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதிகளில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா மஹா உற்சவம் பற்றி குறிப்பிட்டார்.
4 வயது முதல் 16 வயது வரை மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளில் யோகா பயிற்சி அளிக்கப்படும் இந்தியா முழுவதிலும் இருந்து 35 யோகா நிபுணர்கள், 100 தன்னார்வலர்கள் வருகிறார்கள் என்று கூறினார்.
மேலும் யோகா மஹா உற்சவத்தில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உடனடியாக நிறைய பேர் அங்கேயே பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டனர்,
யோகா மஹா உற்சவத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 77083 73470 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று யோகா குணா தெரிவித்து உள்ளார்.
