• June 7, 2025

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில்  வானியல் மன்றம் தொடக்கம்

 கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில்  வானியல் மன்றம் தொடக்கம்

.மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட ஒவ்வொரு பள்ளிகளிலும் வானியல் மன்றங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வானியல் மன்ற தொடக்க விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார்.கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் வானியல் மன்றத்தை தொடக்கி வைத்து மாணவிகளுக்கு கோள்கள் குறித்த விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகளை வழங்கி பேசினார்.

தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு வானியல் மன்ற செயல்பாடுகள் குறித்தும்,தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தார்.

இதில் ஆசிரியை சகாய ஜெபி இன்பென்டா,உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழா தொடக்கத்தில் வானியல் மன்ற ஆசிரியை ஒருங்கிணைப்பாளர் அம்பிகாவதி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியை கிரேனா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *