திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம்; 3 முறை வடம் அறுந்ததால் பரபரப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.
\விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.. இதையொட்டி அதிகாலை 3 மணிக்குமேல் 4 மணிக்குள் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் சுவாமி எழுந்தருளிய சுவாமி தேரோட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்ற ஒருசில நிமிடத்தில் வடம் அறுந்து விட்டது. இதனால் தேர் அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் வேறு வடம் கொண்டு வரப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. அந்த வடமும் சிறிது தூரத்தில் அறுந்துவிட்டது. பின்னர் மூன்றாவது வடம் கொண்டுவரபட்டு தேர் இழுத்து செல்லப்பட்டது.
அந்த வடமும் அறுந்து போனது. இதனால் தேர் நடுவழியில் லட்சுமி டாக்கீஸ் அருகே நின்றது. அப்போது காலை10.45 மணி,.
கோவிலில் இருப்பு வைத்திருந்த 3 வடங்களும் அறுந்து போனதால் வேறு தடம் வாங்கி வர ஏற்பாடு செய்யப்படது. 518 வருட வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் பகல் 12.45 மணிக்கு புதிய வடம் பொருத்தப்பட்டு தேர் இழுத்து செல்லப்பட்டது. தந்திபிள்ளையார் முக்கு பகுதியில் தேர் வந்ததும் நிறுத்தப்பட்டது.
பின்னர் மாலை 4 மணிக்கு தேரோட்டம் மீண்டும் தொடங்கும்.. போத்தீஸ் முக்கு பகுதியில் தேர் நிறுத்தப்பட்டும். அந்த சமயத்தில் கோவிலில் இருந்து அம்மன் தேரோட்டம் தொடங்கும். இரண்டு தேர்களும் சந்த்தித்து கொண்டபிறகு ஒன்றாக புறப்பட்டு கோவில் நிலையை அடையும்.
தேரோட்டத்தை முன்னிட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 147 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருக்கோயிலின் உட்புறமும், வெளிப்புறமும் கண்காணிக்கப்படுகிறது.
தேரோட்டத்தையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.. தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
