“முகமறியா சிற்பி” நூல் வெளியீடு

மதுரையில் நடந்த உலக ஹைக்கூ மாநாட்டில் கோவில்பட்டி கவிஞர் இரா. சிவானந்தம் எழுதிய “முகமறியா சிற்பி ” நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓவிய கவிஞர் அமுதபாரதி நூலை வெளியிட பாரதியாரின் கொள்ளுப் பேத்தி முனைவர் உமா பாரதி , சாகித்ய அகாதமியுவபுரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேசு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் ஹாசிம் உமர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
