• June 7, 2025

கோவில்பட்டியில் மாநில ஆக்கி: அரை இறுதி போட்டிக்கு 4 அணிகள் தகுதி

 கோவில்பட்டியில் மாநில ஆக்கி: அரை இறுதி போட்டிக்கு 4 அணிகள் தகுதி

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில்  5 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

காலையில் முதல் போட்டியாக  மூப்பன்பட்டி வீரன் சுந்தரலிங்கம் ஆக்கி அணி இலுப்பையூரணி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 இரண்டாவது போட்டியில் கூசாலிபட்டி ஏ எம் சி அணியினர் ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் அணியினரை  1-0 என்ற  கோல் கணக்கில் வெற்றி பெற்றது 

மூன்றாவது போட்டியாக சேலம் ஹாக்கி அணி பாண்டவர்மங்கலம் B அணியினரை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்

நான்காவது போட்டியாக டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி ராஜபாளையம் யாழினி ஆக்கி கிளப் அணியினரை 3-1 என்ற கோல் கணக்கில்  வென்றனர் 

முதலாவது கால் இறுதி போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில்  கூசாலிபட்டி ஏஎம்சி அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தனர்.

இரண்டாவது கால் இறுதி போட்டியில் புதுச்சேரி ஆக்கி அணி  1-0 என்ற கோல் கணக்கில் சேலம் அணியினரை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

மூன்றாவது கால இறுதி போட்டியில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணி 5-3 என்ற கோல் கணக்கில் மூப்பன்பட்டி வீரன் சுந்தரலிங்கம் ஆக்கி அணியை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தனர்.

நான்காவது கால் இறுதி போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி 6-0 என்ற கோல் கணக்கில் அம்பேத்கர் ஆக்கி அணியை தோற்க

டி த்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

நாளை(ஞாயிறு )காலை அரை இறுதிப்போட்டியும் மாலை இறுதிப் போட்டியும் நடைபெறும். அதை தொடர்ந்து நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ ராஜு கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்குகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *