சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அந்த வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கோவில்பட்டியில் தலைமறைவாக இருந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், கழுகுமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமாறன்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன், எட்டையாபுரம் காவல் நிலைய சார்புஆய்வாளர் மாதவராஜ், எப்போதும்வென்றான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அந்தோணி திலீப், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜகோபால், சீனிவாசன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் அர்ஜுனராஜ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர்கள் ஜான்சிராணி லட்சுமிபாய், ஜான்சன்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் ரகுராம், முதல் நிலைக் காவலர் கதிரேசன், எட்டையபுரம் காவல் நிலைய முதல் காவலர் சசிகுமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் சதீஷ்பாலா, கோவில்பட்டி போக்குவரத்துப்பிரிவு காவலர் மகேஷ்வரன் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 7,000/- அபராதமும் பெற்றுத்தந்த தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் லதா, தலைமை காவலர்கள் அன்னலட்சுமி, ரபிலா குமாரி மற்றும் முதல் நிலை காவலர் முருகஜோதி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.
இதே போல் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 2,000/- அபராதமும் பெற்றுத்தர உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் காவலர் அருண்சுந்தர் பாராட்டு சான்றிதழ் பெற்றார்.
மொத்தம் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினரின் சிறந்த பணியை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
