ஒவ்வொரு திங்கட்கிழமையும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்- ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
‘தேர்தல் நன்னடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மக்கள் தீர்க்கும் நாள் கூட்டம் இனி வருங்காலங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு அரசு விடுமுறைகள் இல்லாத ஒவ்வொரு திங்கட்கிழமையும் தொடர்ந்து நடத்தப்படும்.
அந்த வகையில் வரும் திங்கட்கிழமை அதாவது 10.6.24 அன்று முற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ளலஅனைத்து சார்நிலை அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்./
எனவே அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் பிரிவில் பதிவு செய்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திகுறிப்பில் ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.
