கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 402 வழக்குகளுக்கு தீர்வு

 கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 402 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் கோவில்பட்டியில் 2 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி கே.அய்யப்பன் தலைமையில் நடந்தது.

சார்பு நீதிபதி டி.மாரிக்காளை முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.கருப்பசாமி, குற்றவியல் நீதிபதி பி.பீட்டர், விரைவு நீதிமன்ற நீதிபதி கே.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில், சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில்  நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி  மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில், மொத்தம் 698 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 402 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மொத்த தொகை ரூ.38,19,400 ஆகும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *