கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இலவச செயற்கை கால், கை பொருத்தும் முகாம்

சென்னை, வரா பியூச்சர்ஸ் எல்எல்பி லிமிடெட் நிறுவன நிதியுதவியுடன் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை, பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் இலவச முகாமை கடந்த 9.5.2024 மற்றும் 12.5.2024 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
விபத்து மற்றும் போலியாவால் பாதிக்கப்பட்டு கை மற்றும் கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு உதவ ஓர் புதிய முயற்சியாக நடத்தப்பட்ட இம்முகாம்களில் கலந்து கொண்டு அளவீடு செய்த பயனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் அதாவது, செயற்கை கால், கை, மூன்று சக்கர மிதிவண்டி, வாக்கர் ஆகியவை வழங்கி பொருத்தும் சிறப்பு முகாம் வருகிற 29.6.2024, சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதில் பயனாளிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு செயற்கை உபகரணங்களை பொருத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்..
மேலும், கடந்த மாதம் நடந்த முகாம்களில் கலந்து கொள்ள முடியாமல் போன மாற்று திறனாளிகள் மீண்டும் 30.6.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்,.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, யுடிஐடி (இருப்பின்) அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ்-களை கொண்டு முகாம் நடக்கும் இடத்துக்கு கொண்டு வரவேண்டும்..
இம்முகாம்களில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 63804 76728, 91765 76503, 99447 62861 மற்றும் 94886 66609 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
,மேற்கண்ட தகவல்களை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல் தெரிவித்துள்ளார்.
