உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நடும் பணி

தமிழகத்தில் 33 சதவீத மரங்கள் இருக்க வேண்டும் ஆனால் 23 சதவீதம் மரங்கள் மட்டுமே உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் குறைந்து 5% மரங்கள் மட்டுமே உள்ளன. மரங்கள் எண்ணிக்கையை 33% ஆக உயர்த்த வேண்டும் என்பதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஒரு கோடி பனை மர விதைகள் விதைத்தல், மரக்கன்று நடுதல், விதைப்பந்து விதைத்தல், போன்ற பணிகளில் இந்த நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், மற்றும் பொது மக்களிடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வை முகாம், கருத்தரங்கு, மாநாடுகளை நடத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழுவின் தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி வரவேற்றார்,
தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூத்த வழக்கறிஞர் கே. ரெங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சை. சையது முகமது, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கி. சந்திரமோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இளநிலை நிர்வாக உதவியாளர் பால் செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர் .
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் எம். பேச்சியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மரக்கன்று நடும் பணி நடைபெற்றது. மதர் சமூக சேவை நிறுவன திட்ட இயக்குனர், ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலர்கள், பணியாளர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார்.
