• June 8, 2025

சட்டப்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 சட்டப்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டியில் சட்டப்படிப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரேவா பிளாசாவில்  நடைபெற்றது. விநாயகா சட்டப் பள்ளி முதல்வர் அனந்த பத்மநாபன்  தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன்,  அரசு குற்றவியல் வழக்கறிஞர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள், “இந்தியாவில் 58 வகையான சட்டப்படிப்புகள் உள்ளன.சட்டம் இல்லாமல் எதுவும் இல்லை.அனைத்து இடங்களிலும் சட்டம் உள்ளன.நமது உரிமைக்கும், உடமைக்கும் சட்டப்பாதுகாப்பு என்றும் அவசியம் “என்றனர்.

சீனியர் மேலாளர் மகேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர் மகேந்திரன் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *