• June 8, 2025

குரூப் 1 தேர்வில் வெற்றி: துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட வணிகவரித்துறை அதிகாரி

 குரூப் 1 தேர்வில் வெற்றி: துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட வணிகவரித்துறை அதிகாரி

2020 ஆம் நடைபெற்ற குரூப்2 தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் தூத்துக்குடியில் உதவி வணிக வரித்துறை அதிகாரியாக ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டுடன்பட்டி கிராமத்தை சேர்ந்த ப. கோகுல்சிங் பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1 தேர்வில் வெற்றி பெற்றார்.

 இதனால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்க இருக்கும்  ப.கோகுல் சிங்குக்கு ஊர் மக்கள் மற்றும் அபிவிருத்தி நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன்  எல்.ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துணை ஆட்சியராக பணியாற்ற இருக்கும்  ப.கோகுல் சிங்குக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.

 இந்நிகழ்ச்சியில் ஒட்டுடன்பட்டி  அபிவிருத்தி நல சங்க தலைவர் அன்ன லட்சுமணமூர்த்தி

பொருளாளர் செல்லத்துரை, 

செயலாளர் ரெங்கசாமி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி லட்சுமணகாந்தன் பாரதி

ஊராட்சி மன்ற தலைவர்கள்,அருண்குமார், அய்யாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *