அமீரக பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தமிழக மாணவி முதலிடம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் செய்யது அபுதாஹிர். இவர் துபாய் நகரில் சொந்தமாக நிறுவனங்களை நிர்வகித்து வருவதோடு சமூக சேவையும் செய்துவருகிறார்
இவரது மகள் ரிபா பாத்திமா ஐக்கிய அரபு அமீரகம் அல் அய்ன் நகரில் உள்ள
ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழக்தில் மருத்துவ உளவியல் மற்றும் ஆராய்ச்சி முதுகலை பட்டப்படிப்பை படித்து வந்தார்.
இந்த ஆராய்ச்சி படிப்பில் மனித மூளையின் வேறுபாடுகளை பகுப்பாய்தல், கோளாறுகள், தன்மைகள் போன்றவற்றை கண்டறிதல் மற்றும் சரி செய்தல் மேலும் செயற்கை நுண்ணறிவு அறிவியல் (artificaial Inteligence science) மூலமாக உளவியல் பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வுகாணுதல் ஆகியவை அடங்கும். சமீபத்தில் வெளியான தேர்வுமுடிவில் மேற்கண்ட ஆராய்ச்சி படிப்பில் அமீரகத்தின் முதல் மாணவியாக ரிபா பாத்திமா தேர்ச்சிபெற்று அதற்கான சிறப்பு சான்றிதழை பெற்றார்.
அமீரகத்தில் முதலிடம் பெற்ற மாணவி ரிபா பாத்திமாவை துணைவேந்தர் காலிப் அலி அல்ஹத்தாமி பாராட்டி கவுரவப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து,கல்லூரியின் டீன் அலி அல்மர்ஸூக்கி, பாடத்திட்ட பேராசிரியர் டாக்டர் சல்மா மற்றும் அணைத்துப்பேராசிரியர்கள் பாராட்டுதல்களையும் பெற்றார்
மேலும் இவருக்கு பத்தாண்டிற்கான கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கி உள்ளது.
