• April 30, 2024

100 சதவீதம் வாக்குப்பதிவு :துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு 

 100 சதவீதம் வாக்குப்பதிவு :துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு 

ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 2024 நாடாளுமன்ற மக்களவை  தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இன்று மாலை வட்டாட்சியர் சரவண பெருமாள், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார்.

மூன்றாம் பாலினத்தினர்  மற்றும் பேருந்து பயணிகளுக்கும், வாக்களிப்பதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன் ராஜா தொடர்ந்து துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர்.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைவான வாக்கு பதிவு பதிவான இடங்களுக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது.

  இந்நிகழ்வில் நிர்வாகிகள் ராம சுப்பிரமணியன், முத்து மாரியப்பன், மேற்பார்வையாளர் மாடசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *