• April 29, 2024

நிழல் இல்லா நாள்: கோவில்பட்டி நர்சிங் மாணவிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

 நிழல் இல்லா நாள்: கோவில்பட்டி நர்சிங் மாணவிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது.

கோவில்பட்டியில் இன்று 13ம்தேதி நிழல் இல்லா நாளாகும். இந்திராநகர் சொர்ணா  நர்சிங் கல்லூரியில் மாணவிகள் வட்டமாக நின்றும் தரையில் குச்சியை ஊன்றியும் நிழல் இல்லா நாளை சரியாக 12.19 மணிக்கு கண்டறிந்தனர். இதற்கான செயல்விளக்க பயற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். நர்சிங் கல்லூரி முதல்வர் சாந்திபிரியா முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் சம்பத் சாமுவேல், டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு நிழல் இல்லா நாள் மற்றும் வானியல் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *