• May 19, 2024

தியாகிகளை கவுரவிக்கும் அரசுக்கு துணை நிற்க வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் ஆதரவு கேட்டார்

 தியாகிகளை கவுரவிக்கும் அரசுக்கு துணை நிற்க வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் ஆதரவு கேட்டார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி 2-வது  முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு சைவ வேளாளா் சங்க நிா்வாகிகள் ,மத்தியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி பேசுகையில் கூறியாதாவது:-

 மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நாட்டிற்காக தியாகம் செய்து மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில்  அவர்களது நினைவிடத்தில் உள்ள சிலைகளுக்கு ஆண்டுதோறும் அமைச்சர்கள் மூலம் ,மாலை அணிவிக்க வைத்து கவுரப்படுத்தி வருகிறார்..

இந்த மாவட்டத்தில் செக்கு இழுத்த செம்மல் சுதந்திர போராட்ட தியாகி வஉசியை கவுரவிக்கும் விதமாக திமுக ஆட்சி வந்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகாில் உள்ள ஓரு சாலைக்கு வஉசி சாலை என பெயாிட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் கனிமொழிக்கு ஆதரவு தர வேண்டும் .

இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சண்முகம், சங்க நிர்வாகிகள் துரை, ராமமூர்த்தி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், சிவன் கோவில் அங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *