உலக சிட்டுக்குருவி தினம்

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக சிட்டுக்குருவி மற்றும் பறவை இனங்களை பாதுகாப்பு வகையில் கடந்த 10 வருடங்களாக நாள்தோறும் பறவைகளுக்கு நவதானியங்கள் மற்றும் மண் தட்டில் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்,
மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமையில் கோவில்பட்டியில் பல்வேறு பகுதிகளில் சிட்டுக்குருவிகளுக்கு நவதானியம் மற்றும் மண் தட்டில் தண்ணீர் ஊற்றி வைத்தனர்,

இந்த நிகழ்ச்சியில் இயக்க நண்பர்கள் கண்ணன்,மதிமுத்து,சேகர்,நாகராஜ், முத்துசாமி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
