பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்,
கோவில்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் முக்கிய
திருவிழாவாக கருதப்படும் பங்குனி பெருந்திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது,.
ஒவ்வொரு நாளும் கோவிலில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், வீதி உலாநடைபெறும்.கோவில் மைதானத்தில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கும். விதவிதமா ராட்டினங்கள்,
சிறுவர், சிறுமிகளை மகிழ்விக்கும் விளையாட்டு அம்சங்கள், சர்க்கஸ் என்று களை கட்டும்.
கோவில்பட்டி மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் கோவில் திருவிழாவுக்கு வருவார்கள். அந்த சமயத்தில் ஜவுளி கடைகளில் வியாபாரம் களை கட்டும்.
பங்குனி பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் முழு விவரம் வருமாறு:-