கோவில்பட்டி கோவிலில் ரத சப்தமி பூஜை

ஆண்டுதோறும் தை மாதம் உத்தராயன புண்ய காலத்தில் வளர்பிறை சப்தமி திதியில் சூர்ய பகவான் ரதம் வடக்கு நோக்கி திரும்பும் இந்நாளில் அனைத்து சிவ, வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது ஐதீகம்.
இதனையொட்டி கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி,ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
பிறகு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு மஞ்சள்,பால்,தேன், விபுதி,பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையுடன் ரத சப்தமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
