திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 2.43 கோடி மதிப்பில் ஸ்கேன் இயந்திரம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2.43 கோடி மதிப்புள்ள ஸ்கேன் இயந்திரத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைத்து, பயன்பாட்டிற்கு வழங்கினார்.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
