கோவில்பட்டியில் இரவு நேர பஸ் சேவை திடீர் நிறுத்தம்:த. மா. கா. நகர தலைவர் போராட்டம் அறிவிப்பு

கே.பி,ராஜகோபால்
கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில்இரவு நேர பஸ் சேவையை சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், “கோவில்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கூடுதல் பஸ்நிலையம் வரை இயங்கும் என்றார்
ஆனால் தற்போது இந்த பஸ் சேவை திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து 15 நாட்களுக்கு மேலாக இன்று வரை இரவு நேர பஸ் இயக்கப்படவில்லை
எனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக மீண்டும் இரவு நேர பஸ் இயக்க கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் கே. பி. ராஜகோபால் அறிவித்து உள்ளார்.
