• May 20, 2024

கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் ஆதார் சேவை மையம் செயல்படும்

 கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில்  ஞாயிற்றுக்கிழமையும்  ஆதார் சேவை மையம் செயல்படும்

கோவில்பட்டி  அஞ்சல்  கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில், கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் முந்தைய அறிவிப்பின்படி 5.1.2024 தேதி முதல் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.

பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையிலும் தற்போது ஞாயிiற்றுக்கிழமைகளிலும் ஆதார் மையங்கள் செயல்படும்.

கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்                                                பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.சுரேஷ் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *