சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண தொகை: எட்டயபுரம் தாசில்தாரிடம் பா.ஜனதா கோரிக்கை

கனமழை காரணமாக பெரும் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் உடனடியாக கணக்கெடுத்து நிவாரணத் தொகை வழங்க கோரி எட்டயபுரம் தாசில்தாரிடம் பா.ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிதி, இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். துண்டிக்கப்பட்ட அனைத்து சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மாவட்ட பா.ஜனதா செயலாளர் ஆத்திராஜ், மாவட்ட துணைத் தலைவர் சேது ராஜ், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, ,ஒன்றிய தலைவர்கள் சரவணன், கனகவேல்ராஜ், சிவபெருமாள்,ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சுப்புராம், ஹரிஹரன், காளிராஜ், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் முருகன், ஜெய கண்ணன் நாகராஜ் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
இந்த தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து வெளியிட்டுள்ளார்.
