சைவ செட்டியார் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள்

கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கம் சார்பில் தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன,
சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சேலைகள், ;லுங்கிகள் மற்றும் பிஸ்கட், ரோட்டி, தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.
நிவாரண பொருட்கள் அனைத்தும் சங்க தலைவர் சிவபிரகாசம், செயலாளர் சேனாபதி, பொருளாளர் கலியுகத்து அய்யனார் ஆகியோர் தலைமையில், நகராட்சி தலைவர் கருணாநிதி முன்னிலையில் அமைச்சர் கீதா ஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
