தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சரும்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உதவி பொருட்களை வழங்கினார்.
அவருடன் மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் உள்பட பலர் வந்து இருந்தனர்
