• June 7, 2025

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு கோவில்பட்டி போலீசார் அனுப்பிய உணவு பொருட்கள்

 மழையால் பாதிக்கப்பட்டோருக்கு கோவில்பட்டி போலீசார் அனுப்பிய உணவு பொருட்கள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கடந்த இரண்டு நாட்கள் கடுமையான மழையை சந்தித்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி,  திருச்செந்தூர், காயல்பட்டினம் , ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், நடுவக்குறிச்சி செய்துங்கநல்லூர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகள் மோசமாக பாதிக்கபட்டுள்ளன.

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். தாமிரபரணி ஆரங்கரையோர பகுதி கிராம மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் அவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழையினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மட்டுமின்றி தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள போலீஸ் நிலையங்கள் மூலம் உணவு ப பொருட்கள் சேகரித்து பாதிக்கபப்ட்ட பகுதிகளுக்கு அனுப்பும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் உணவு பொருட்கள்  சேகரிக்கப்பட்டு வெள்ளம் பாதித்து பகுதிகளுக்கு அனுப்பி வைக்கபப்டுகிறது.\

அந்த வகையில் கோவில்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு போலீஸ் நிலையங்களில் இருந்தும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ்,மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் சப்-இன்ச்பெக்டர்கள்  செந்தில்குமார், அரிக்கண்ணன், ராஜேந்திரன், ஆரோக்கிய ஜென்சி, சுகுமார் மற்றும் போலீசார் இணைந்து   உணவு பொருட்கள சேகரிப்பில் ஈடுபட்டனர்,  

இதன்பேரில் பலரிடம்  ரொட்டி, பண், பிஸ்கட், ரஸ்க் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் பெறப்பட்டன. சேகரித்து பொருட்கள் அனைத்தும் நேற்று மாலை மற்றும் இன்று காலை என இரண்டு தடவை  போலீஸ் வேன் ,மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றை போலீஸ் குழுவினர் விநியோகம் செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *