கோவில்பட்டியில் 3-வது நாளாக மழை; சாலைகள் அரிப்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

கோவில்பட்டியில் நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் இரவு முழுக்க பெய்த மழை இன்று மூன்றாவது நாளாக மழை நீடித்தது.
கோவில்பட்டி மற்றும் இன்றி அப்பனேரி, நாலாட்டின்புதூர், பசுவந்தனை,இளையரசநேந்தல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கோவில்பட்டி மூப்பன்பட்டி கண்மாயில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதால் தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பணிமனை டெப்போ அமைந்துள்ள பகுதிக்குள் காலை நேரத்தில் ஊழியர்கள் செல்ல இயலாத வண்ணம் இடுப்பளவு தண்ணீர் சென்றது.
இதனால் டெப்போவில் இருந்து பஸ்கள் வெளியில் வர இயலாத சூழ்நிலை உண்டானது.
அதிகாலையில் பணிக்கு சென்ற ஊழியர்கள் பணிமனைக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். கோவில்பட்டி நகரில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் தவித்தனர்.
தொடர் மழை காரணமாக கோவில்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது. பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பீக்கிலி பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

மேலும் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனைப்பட்டி உப்பத்தூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது
அப்பனேரி, சுபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. இதுவரை மின் விநியோகம் தரப்படவில்லை. பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி,கோவில்பட்டி வழியாக செல்லும் ஒரு சில ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.
