• June 7, 2025

கோவில்பட்டியில் ஆதிபராசக்தி பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி;  கடம்பூர் ராஜூ  தொடங்கி வைத்தார்

 கோவில்பட்டியில் ஆதிபராசக்தி பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி;  கடம்பூர் ராஜூ  தொடங்கி வைத்தார்

 கோவில்பட்டி  மந்திதோப்பு சாலையில் அமைந்துள்ள  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றம் சார்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக அவைத்தலைவர் அப்பாசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு இரு முடி கட்டி பயணத்தை தொடங்கி வைத்தார். 

பின்னர் ஒரு திருமண மண்டபத்தில், 

விவேகானந்தா கேந்திரத்தின் 52 வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு அன்ன பூஜை, கீதா ஜெயந்தி விழாவை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

பின்னர் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

இதனைத் தொடர்ந்து.கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவனம் துளசி மடத்தில் மார்கழி மாதம் பூஜை நடைபெற்றது.இதில் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளர் விஜய் பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,நகர மன்ற உறுப்பினர் கவியரசன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அம்பிகைபாலன், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி, இனாம்மணியாட்சி பஞ்சாயத்து துணைத் தலைவி ரேவதி, அதிமுக நிர்வாகிகள் கதர் ஸ்டோர்ஸ் சுப்புராஜ், கோபி, முருகன், பழனி குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *