மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தகோரி பொதுமக்களின் கையெழுத்து படிவங்கள்; கலெக்டருக்கு தபாலில் அனுப்பப்பட்டன

கோவில்பட்டியில் இருந்து குருமலை வழியாக கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்களை கோரிக்கை மனுவோடு இணைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, முனைவர் சம்பத்குமார், ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், உரத்தசிந்தனை சிவானந்தம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மேரிஷீலா, தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பாபு, மக்கள் நீதிமய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் கட்சி ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டனர்
