எட்டையபுரத்தில் புதிய அங்கன்வாடி மையத்தின் கட்டுமான பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

எட்டையபுரம் பேரூராட்சி 11- வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் உருவாக உள்ளது. இதன் கட்டுமான பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் தொடக்கி வைத்தார்
.நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி மடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
