அம்பேத்கர் நினைவு தினம்: உருவப்படத்துக்கு மரியாதை
சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் விளாத்திகுளம் தொகுதி அமைப்பாளர் சடையாண்டி, ஒன்றிய பொருளாளர் வில்லாளன் ரெஸ்லி, பேரூர் செயலாளர் அழகுமுனியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.