2 நிமிடம் மட்டுமே மூடப்படும் கிருஷ்ணர் கோவில்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவார்பு நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில், இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோவில் ஆகும்.
கோவில் திறப்பு நேரம் நள்ளிரவு 12.00மணி முதல் நள்ளிரவு 11.58மணி வரை. ஒவ்வொரு நாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7 கோவில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்.
அற்புதம்! 1500ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும்.
கோவில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்படுகிறது. 11.58மணி முதல் 12 மணி வரை. இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப் படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப் படுகிறது. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.
அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின், மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை.
அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒரு முறை, கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது, கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து, கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை 2 நிமிடங்கள் மட்டுமே.
பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.
தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக “இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?” என அழைப்பார்.
பிரசாதம் வழங்குதலில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கவேண்டும். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால், நீங்கள் அதன் பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள்வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.
தொகுப்பு : காசி விஸ்வநாதன் -திருநெல்வேலி
