• June 7, 2025

கோவில்பட்டியில் ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம்

 கோவில்பட்டியில் ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம்

கோவில்பட்டி லட்சுமி ஆலை மேம்பாலம் அருகே ஆர்.எஸ்.எஸ். ஊா்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை வடக்கு மாவட்டச் செயலா் சீதாராமன் தொடக்கி வைத்தாா். ஊா்வலம் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று காந்தி மைதானத்தை அடைந்தது.

அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆா்.எஸ்.எஸ். தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளா் கணபதி சுப்ரமணியன் பேசினாா். முத்தானந்த சுவாமி மடம் ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.

பா.ஜ.க. தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ராமகாளியப்பன், தொழிலதிபா் கேசவபெருமாள்சாமி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனா். முன்னதாக, ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

ஊா்வலம், பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் ஆகியோா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *