மாடுகளை திருடி மினி வேனில் ஏற்றி சென்ற 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்நகர் பகுதியை சேர்ந்த துரைகனி மகன் உத்தண்டுராஜ் (வயது 39) என்பவர் சம்பவத்தன்று அன்று இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்திருந்தார். அதில் 2 மாடுகள் திருட்டு போனது.
இதுகுறித்து உத்தண்டுராஜ்) அளித்த புகாரியின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் வேலாயுதம் (24), செம்புலிங்கம் மகன் மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி மாட்டு கொட்டைகையில் கட்டியிருந்த 2 மாடுகளை மினி வேனில் திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார், வேலாயுதம் மற்றும் மாசானமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 2 மாடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
