• June 7, 2025

கிராமத்து கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

 கிராமத்து கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி கிராம பகுதியில் கருப்பண்ணசாமி, பாப்பாத்திஅம்மாள், அங்காளபரமேஸ்வரி கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கோவிலை இடிக்க  சென்ற வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். சம்பவ இடத்தில் ஏ.டி.எஸ்.பி..சந்திரன், டி.எஸ்.பி..துர்காதேவி ஆகியோர் தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஜே.சி.பி. இயந்திரங்களைதடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள்  முற்றுகையிட்டுள்ளதால் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *