பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகள்: நஷ்ட ஈடு வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கொவில்பட்ட்டியை அடுத்த ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்.ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்கள் மான், காட்டுப்பன்றி ஆகிய காட்டு விலங்குகளால் சேதம் அடைந்துள்ளது. நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது,.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஊத்துப்பட்டி கிளை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம், பரமராஜ், முனிசாமி, நகர செயலாளர் சரோஜா, தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
