பஸ்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து கீழே இறக்கிய நடிகை கைது; வீடியோ வைரல்

பா,ஜனதா கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகியாக துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளார். இவர் நேற்று சென்னை குன்றத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டை தாண்டியும் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டார். போக்குவரத்து நெரிசலில் நின்ற அந்த பஸ் டிரைவரிடம் வாக்குவாதம் செய்து படிக்கட்டில் பயணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தார்;
அத்துடன் நிற்காமல் படிக்கட்டில் நின்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கினார்., பஸ்சின் பின்புற படிக்கட்டு அருகே இருக்கையில் அமர்ந்து இருந்த கண்டக்டரை ஒருமையில் திட்டினார்.
ஒரு கட்டத்தில் உனக்கு அறிவு இல்லையா, இப்படி படியில் தொங்குவதை பார்த்துக்கிட்டு இருக்கே, அறிவு கெட்ட நாயே என திட்டினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சிலரும் வந்து மாணவர்களை கீழே இறக்கி விட்டனர்,
இந்த காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரல் ஆனது. இந்நிலையில் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர்.
போலீசார் அவரை கைது செய்வதாக தெரிவித்தனர். வாரண்ட் இருக்கிறதா என்று கேடடற்கு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து போலீஸ் ஜீப்பில் ஏஏறும்படி கூறினார். அதற்கு ரஞ்சனா, நான் என் காரில் வருகிறேன் என்று கூரியதை ஏற்காத போலீசார் வலுகாட்டாயமாக போலீஸ்ஜீப்பில் அழைத்து சென்றனர்.
இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “இவருடைய வார்த்தைகள் தடித்தே இருந்தாலும் இவரின் பதை பதைப்பும், அக்கறையும் பாராட்டப்பட வேண்டியதே. ஒரு காவல்துறை அதிகாரியாக, தாயாக, சகோதரியாக, சமூக விழிப்புணர்வாளராக இவரின் கொதிப்பு நியாயமானதே. பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் தான் கண்டனத்திற்கு, தண்டனைக்கு உரியவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
— நாடு எங்கபோகுது? (@Piramachari) November 3, 2023
