கோவில்பட்டியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு-திருத்தம் முகாம்; 4 நாட்கள் நடக்கிறது

தமிழகம் முழுவதும் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க , நீக்க மற்றும் திருத்தம் செய்யும் முகாம் இம்மாதம் 4 நாட்கள் நடக்கிறது. கோவில்பட்டியிலும் இந்த முகாம் நடைபெறுகிறது.
நாளை 4-ந்தேதி, 5-ந்தேதி , மற்றும் 18,19.11.23-ந்தேதிகளில் இந்த முகாம் உங்கள் வாக்குசாவடியில்(அதாவது நீங்கள் ஓட்டுப்போடும் வாக்குசாவடி) நடக்கிறது.
வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்யதேவையான ஆவணங்கள் விவரம் வருமாறு:_
அடையாள சான்றுக்கு பள்ளி சான்றிதல, ரேஷன் கார்டு, பான்கார்டு,ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், மாணவர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்று.
வயது சான்றுக்கு பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பான்கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒன்று.
முகவரி சான்றுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம், கேஸ் பில் இவற்றில் ஏதாவது ஒன்று.
மேலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு செல்லவேண்டும் என்று அர்விக்கபபட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் இந்த முகாமில் பொதுமக்களுக்கு உதவி செய்ய ஒவ்வொரு கட்சி சார்பிலும் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்று தெரிகிறது.
