ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பலகாரம் செய்ய தேவையான பொருட்களை மானிய விலையில் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி புறநகர் முத்தையாபுரம் 53வது வார்டு ரேஷன் கடை முன்பு ஜனநாயக மாத சங்க புறநகர செயலாளர் கண்ணகி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
அதாவது எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை பயன்படுத்தி பலகாரம் சுட்டு நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர்..
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, கிளை தலைவர் வெள்ளையம்மாள், செயலாளர் பால்தாய், பாக்கியம், சந்தனமாரி, லட்சுமி, ஜான்சி ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.