பங்காரு அடிகளார் காலமானார்

ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82.
பங்காரு அடிகளார் மரணசெய்தி அறிந்ததும் மேல்மருவத்தூரில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளை இறுதி சடங்கு நடக்கிறது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் இருந்தார்.
இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார்.
உச்ச சக்தியின் அவதாரமே – ஆதிபராசக்தி என்று இவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படுகிறது. இவருக்கு ஏராளமான பக்தியுள்ள விசுவாசிகள் உள்ளனர்.
பங்காரு அடிகளார் கோவில் மற்றும் ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார்.
பங்காரு அடிகளாருக்கு 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.
