• May 19, 2024

கோவில்பட்டியில் 3 தியேட்டர்களில் `லியோ வெளியீடு; ரசிகர்கள் ஆரவாரம்   

 கோவில்பட்டியில் 3 தியேட்டர்களில் `லியோ வெளியீடு; ரசிகர்கள் ஆரவாரம்   

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் நடித்துள்ள  `லியோ’ திரைப்படம் இன்று வெளியாகியது. திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே காலை 9 மணியில் இருந்து திரையிடப்பட்டது.

முன்பதிவு ஏற்கனவே தொடங்கியதால் காட்சிகளை மாற்றுவதில் சிரமம் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தின் அடிப்படையில் காலை 9 மணியில் இருந்து திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து அதன்படி வெளியிட்டது.

கோவில்பட்டியில் சத்யபாமா, லட்சுமி மற்றும் சண்முகா ஆகிய தியேட்டர்களில் லியோ வெளியாகி உள்ளது. மொத்தம் 5 ஸ்கிரீன்களில் படம் திரையிடப்படுகிறது. இன்று முதல் நாள் ,முதல் காட்சி ரசிகர் மன்றம் சார்பில் திரையிடப்பட்டது.

இந்த டிக்கெட் கோவில்பட்டியில் அதிகபட்சமாக ஒரு டிக்கெட் ரூ700 வரை விற்பனையானது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி இன்று படம் பார்த்தனர். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ரசிகர்களின் ஆரவாரம் இருந்தது.

கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர்,  ரசிகர்மன்ற டிக்கெட்டை 1,1௦,௦௦1 ரூபாய் கொடுத்து வாங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில் இத்தொகையை கொடுத்து லியோ படத்துக்கான ஒரு டிக்கெட் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும்  லியோ திரைப்படம் இணையதளத்தில் இன்று வெளியாகியது. இது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *