கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ) சார்பாக கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரம் நடு விழா கோவில்பட்டி சிட்கோ தொழில் பேட்டையில் இன்று மதியம் நடைபெற்றது.
மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சுவர்ணலதா, திருநெல்வேலி சிட்கோ கிளை மேலாளர் சத்தியராஜ், கோவில்பட்டி சிட்கோ அசோசியேஷன் தலைவரும், நகர் மன்ற துணை தலைவருமான ஆர். எஸ். ரமேஷ், சிட்கோ அசோசியேஷன் துணை தலைவர் ராஜ், செயலாளர் கோபால்சாமி, உறுப்பினர் ராம் குமார், மாவட்ட தொழில் மையம் திட்ட மேலாளர் ஜி.அகிலா, உதவி பொறியாளர் ஆர்.ராஜேஷ், சிட்கோ உதவியாளர் எஸ்.மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 250 மரக்கன்றுகளை சிட்கோ வளாகத்தில் நட்டினர்.
